விமான நிலையத்தில் ரூ.2.83 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

by Editor / 28-08-2022 11:34:34am
விமான நிலையத்தில் ரூ.2.83 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்


டாக்காவிலில் இருந்து  சென்னை வந்த விமானத்தை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். அந்த விமானத்தின் கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.45.15 லட்சம் மதிப்புள்ள 995 கிராம் தங்கக்கட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று, கடந்த 25ம் தேதி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.29.92 லட்சம் மதிப்புள்ள 642 கிராம் தங்கமும், 24-ம் தேதி ரூ.78.46 லட்சம் மதிப்புள்ள 1.736 கிலோ கிராம் தங்கமும், 23-ம் தேதி சோதனையில் ரூ.55.59 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ கிராம் தங்கமும், 22-ம் தேதி சோதனையில் ரூ.73.79 லட்சம் மதிப்புள்ள 1.622 கிலோ கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் கடந்த 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை மொத்தம் ரூ.2.83 கோடி மதிப்பிலான 6.2 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Tags :

Share via