500 கிலோ லட்டால் ஆன விநாயகர்
.வேலுார் மாவட்டம், குடியாத்தம் நெல்லார்பேட்டை பாவோடும் தோப்பு பகுதியில் ஜோதி லட்டு விநாயகர் கோவில் உள்ளது. விநாயகர் சதுரத்தியையொட்டி இன்று 500 கிலோ எடையில் லட்டால் ஆன விநாயகர் சிலை செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை ஜோதி லட்டு விநாயகர் சதுர்த்தி கமிட்டியினர் செய்திருந்தனர். கடந்த 26 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியன்று இவர்கள் இது போன்ற லட்டால் விநாயகர் சிலை செய்து, சதுர்த்தி முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகின்றனர். அதே போல குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில் உள்ள வலம்புரி சக்தி கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 20 வது ஆண்டாக 301 கிலோ எடையில் லட்டால் ஆன சக்தி கணபதி அலங்காரத்தில் பொது மக்களுக்கு காட்சியளித்தார்.
Tags :