காஷ்மீரில் நடந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்

by Staff / 24-04-2024 03:14:53pm
காஷ்மீரில் நடந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்

ஜம்மு-காஷ்மீர் சிந்திபெண்டி கிராமத்தின் ரென்ஜி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற வீரர்கள், பயங்கரவாதிகளை தேடிக்கொண்டிருந்தனர். அப்போது, பாதுகாபுப் படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில், வீரர் ஒருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

 

Tags :

Share via