ஆந்திராவில் ரூபாய் 150 கோடி மதிப்புள்ள 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் வனத்துறை காவலர்கள் உள்பட 6 பேர் கைது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வருவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா அடுத்துள்ள மன்றம் பள்ளி கிராமத்தில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். இதில் 2 டன் எடை கொண்ட 100 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்த போலீசார் வனத்துறை காவலர் உட்பட 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் செம்மர கட்டைகளை சென்னைக்கு கடத்தவிருந்த இருந்தது தெரிய வந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :