பட்டா கத்தியால் வெட்டி படுகொலை செய்த இளைஞர் கைது

by Staff / 18-05-2022 02:19:53pm
பட்டா கத்தியால் வெட்டி படுகொலை செய்த இளைஞர் கைது

 
சென்னை ஆதம்பாக்கத்தில், மூதாட்டியை பட்டா கத்தியால் வெட்டி படுகொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர்  வேலாத்தா. இவரது வீட்டருகே வசிக்கும் விக்னேஷ் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வேலாத்தாவின் காதை வெட்டி அவரது காதணியை திருடி சென்றார்.

இதுதவிர தந்தையை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்ட விக்னேஷ், கடந்த 6 மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து வெளி வந்துள்ளார்.இந்தநிலையில் நேற்று குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த ஆஷா மற்றும் அவரது மகள் ஆர்த்தி ஆகியோருடன் விக்னேஷ் தகராறு செய்துள்ளார்.

இதனை தட்டிக்கேட்க வந்த மூதாட்டி வேலாத்தாவை கண்டு ஆத்திரமடைந்த விக்னேஷ், தன்னிடம் இருந்த பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via