தமிழ் இலக்கிய இலக்கணத் திறனை ஊக்குவிக்கும் விதமாக 1 இலட்சத்திற்கான காசோலைகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்.,

by Admin / 22-04-2022 02:25:00pm
தமிழ் இலக்கிய இலக்கணத் திறனை ஊக்குவிக்கும் விதமாக 1 இலட்சத்திற்கான காசோலைகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்.,

 

தமிழ் மொழியின் மீது கொண்ட ஈடுபாட்டால் திருக்குறள், தொல்காப்பியம், திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய நூல்களை மனனம் செய்து பல விருதுகளை பெற்றுள்ள தேனி மாவட்டம், மறவப்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த இரட்டையர் செந்தமிழ் சாலினி மற்றும் முத்தமிழ் சாமினி ஆகியோரை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அழைத்துப் பாராட்டி, அவர்களது தமிழ் இலக்கிய இலக்கணத் திறனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் தலா ரூ. 1 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார்.

 

Tags :

Share via