14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூர தந்தை

by Staff / 14-10-2023 04:17:21pm
14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூர தந்தை

 

கிழக்கு டெல்லியின் மயூர் விஹார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்ற மகளை தந்தையே தனது காம இச்சைக்கு இரையாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் 14 வயது மகளை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். மது போதையில் மகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த வழக்கில் பீகாரைச் சேர்ந்த மக்சூத் என்பவரை போலீசார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via