அசாமில் வெள்ளம் மற்றும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

by Staff / 20-05-2022 12:12:48pm
அசாமில் வெள்ளம் மற்றும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அசாம் வெள்ளத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 20 மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழையால் சாலைகள் பாலங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. தேசிய நெடுஞ்சாலை இருக்கும் உட்பட்ட பகுதிகள் புதிதாக ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சாலையில் விழுந்தபள்ளத்தை மூடும்  பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.ஹப்லாங் ரயில் நிலையம் இடிபாடுகளில் புதைந்து கிடக்கிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via