சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய்கள்
சமீப காலமாக தெருநாய்கள் குழந்தைகளை தாக்கும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில், உத்திரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. 12 வயது சிறுவன் ஒருவன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஐந்து நாய்கள் சுற்றி வளைத்து கடித்துள்ளன. சிறுவன் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக வந்த டெலிவரி பாய் ஒருவர் வந்து சிறுவனை காப்பாற்றினார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Tags :