பெண்ணை ஆட்டோவில் கடத்தி கூட்டு பலாத்காரம்
ஆட்டோ டிரைவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் தெலங்கானாவின் வாரங்கலில் நடந்துள்ளது. நயீம்நகரை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் இம்மாதம் 27ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஆட்டோவில் ஏறியுள்ளார். டிரைவர் ராகேஷ் தனது நண்பர்களான சனத், சதீஷ் ஆகியோரை அழைத்த நிலையில், அவர்கள் வந்தவுடன் பீமாரம் நோக்கி ஆட்டோவை எடுத்துச் சென்று அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தனர். பின்னர், அப்பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அங்கிருந்து வீட்டிற்கு சென்ற பெண், குடும்பத்தினருடன் சென்று போலீசில் புகார் அளித்தார்.
Tags :