இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு 4,012 மையங்களில் 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

by Editor / 21-05-2022 08:20:58am
இன்று  டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு 4,012 மையங்களில்  11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

 டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 5,529 பதவியிடங்களுக்கு இன்று 4,012 மையங்களில் நடத்தப்படும் இந்த தேர்வினை 6.82லட்சம் பெண்கள் உள்பட 11.78 லட்சம் பேர் குரூப்-2 தேர்வு எழுத உள்ளனர். குரூப்-2 தேர்வு பணிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் 323 பறக்கும் படை, 6,400 ஆய்வு குழு, 4,012 வீடியோ குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதுவோர் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் எனவும், ஹால் டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் எனவும்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : Today 11.78 lakh people are writing the DNBSC Group-2 exam in 4,012 centers.

Share via