தென்காசி மாவட்டத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்வு
தென்மாவட்டங்களில் எங்குமில்லாதவகையில் கட்டுமானப் பொருட்களின் விலை தென்காசி மாவட்டத்தில் கடுமையாக உயர்ந்துள்ளது.தென்காசி மாவட்டம் முழுவதுமுள்ள பகுதிகளில் செயல்பட்டுவரும் கல் குவாரிகள் ஆய்வுக்காகவும், கனிமச் சீட்டு வழங்கப்படாமலும் மூடப்பட்டுள்ளதால் கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் எம் சாண்ட் மணல், குண்டுகல், ஜல்லி,சரல் தட்டுப்பாடு,கட்டுமான வேலைகள் நிறுத்தம், விருதுநகர் மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யபப்டுவதால் விலை கடும் உயர்வு. கட்டுமானப் பணிகள் பாதிப்பு.கட்டுமானதொழிலாளர்கள் கடும் பாதிப்பு.மழைக்காலம் தொடங்குவதால் புதிய வீடு கட்டுபவர்கள் தவிப்பு.
தென்காசி மாவட்டத்தில் விலை உயர்வு விபரம்:
தற்போது 1யூனிட்
குண்டுக்கல் -1100 லிருந்து 1500
முக்கால் இஞ்ச் ஜல்லி-2100 லிருந்து 2800
எம்.சாண்ட் -3100 லிருந்து 3800
இது இன்னும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Tags : Prices of construction materials have risen sharply in the Tenkasi district