காஷ்மீரில் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

by Staff / 26-05-2022 04:56:26pm
காஷ்மீரில் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குப்ரவா மாவட்டத்தின் ஜி மகுந்த கிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு  பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த நிலைகளில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காஷ்மீர் ஐஜி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via