ஆன்லைனில் மரம் அறுக்கும் ரம்பத்தை வாங்கி கொலை" - வெளியான அதிர்ச்சி சம்பவம்

by Editor / 28-05-2022 01:37:32pm
ஆன்லைனில் மரம் அறுக்கும் ரம்பத்தை வாங்கி கொலை

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் பகுதியை சேர்ந்தவர் ஐடி நிறுவன ஊழியர் பிரகாஷ்.   காயத்ரி என்ற மனைவியும், நித்திய ஸ்ரீ, ஹரிஹரன் என்ற ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.  இவர்களின் வீட்டுக்கு இன்று காலை பிரகாஷின் தந்தை வந்த நிலையில் வீட்டில் அனைவரும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  இதுகுறித்து உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சடலங்களை மீட்பு  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அத்துடன் பிரகாஷ் வீட்டில் சோதனை நடத்தியதில் ஒரு கடிதம் சிக்கியது. அதில் இந்த முடிவு குடும்பத்தோடு சேர்ந்து எடுத்த முடிவு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.பிரகாஷ் வீட்டில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான கடன் பத்திரம் இருந்துள்ளது. இதனால் அவர் கடன் தொல்லையால் இந்த முடிவுக்கு வந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன் முதற்கட்ட விசாரணையில் பிரகாஷ் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.  இது குறித்து நேரில் வந்து ஆய்வு செய்த காவல் ஆணையர் ரவி செய்தியாளர்களை சந்தித்த போது,  "பொழிச்சலூர் கொலை சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடன் தொல்லையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.ஆன்லைனில் மரம் அறுக்கும் ரம்பத்தை வாங்கி கொலை செய்துள்ளார். மயக்க மருந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.

 

Tags : Buy sawmill online and kill- shocking incident released

Share via