இலங்கை மீனவர்களுக்கு 15,000 லிட்டர் மண்ணெண்ணெய் வினியோகம் செய்தது இந்தியா

by Staff / 29-05-2022 12:50:01pm
இலங்கை மீனவர்களுக்கு 15,000 லிட்டர் மண்ணெண்ணெய் வினியோகம் செய்தது இந்தியா


எரிபொருள் பற்றாக்குறையால் நின்றுபோன மீன்பிடி தொழில் மற்றும் படகு சேவைகளை மீண்டும் துவக்க 700 இலங்கை மீனவர்களுக்கு 15,000 லிட்டர் மண்ணெண்ணெய் இந்தியா அனுப்பியது.கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது மனிதாபிமான உதவியாக இந்தியா அனுப்பிய 15,000 லிட்டர் மண்ணெண்ணெய் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்பாணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 700 மீனவர்களுக்கு விநியோக்கப்பட்டதாக  யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via