சாக்கடையில் மிதந்த ரூபாய் நோட்டுகள் கைவிட்டு எடுத்தவருக்கும் அதிர்ச்சி

by Editor / 17-07-2022 01:25:25pm
சாக்கடையில் மிதந்த ரூபாய் நோட்டுகள் கைவிட்டு எடுத்தவருக்கும் அதிர்ச்சி


2000 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் தூத்துக்குடி கழிவுநீர் கால்வாயில் மிதந்து வந்ததை அப்பகுதி மக்கள் வியப்புடன் வேடிக்கை பார்த்தனர். தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள சிவன் கோயில் தேரடி வீதி பகுதியில் கழிவு நீர் உள்ளது. இந்த கழிவு நீர் ஓடையில் சம்பவத்தன்று திடீரென 2000.. 200 ...100...50..ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றாக மிதந்து வந்தன. அந்த பகுதியில் நின்று கொண்டவர்கள் மிகுந்த ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். கழிவுநீரில் கையை விட்டு பணத்தை எப்படி எடுப்பது என்று சிலர் யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் மட்டும் வேகமாக முன்னேறி கையைவிட்டு 200 ரூபாய் 50 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் எடுத்து பார்த்தா அவரு முகத்தில் அவ்வளவு பிரகாசமான மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு ஒரு நோட்டை எடுத்து பார்த்தும்  அவருக்கு அது சிறு குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுகள் என தெரியவந்ததும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.

 

Tags :

Share via