காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

by Editor / 17-07-2022 01:16:04pm
காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு உள்ளதால் காவிரியில் வெள்ளம் சீறிப் பாய்கிறது ஆற்றில் இறங்க வைக்க முயற்சிக்க வேண்டாமென பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கேஆர்எஸ் கபினி அணைகளில் இருந்து ஒரு லட்சம் 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் தமிழக எல்லைக்கு தொடர்ந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பி விட்ட நிலையில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆற்றில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சில வீடுகளுக்கு ஆற்று நீர் புகுந்ததால் இந்திரா நகர் அண்ணா நகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் நகராட்சி துவக்கப் பள்ளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via