தத்து எடுத்து வளர்த்த மகளை பாலியல் சீண்டல் செய்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது

by Editor / 01-05-2022 09:50:04am
தத்து எடுத்து வளர்த்த மகளை பாலியல் சீண்டல் செய்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது

தத்து எடுத்து வளர்த்து வந்த சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கைது  செய்யப்பட்டார்.சூலூர் கலைமகள் நகரைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி மகன் பன்பரசு (54).  இவர் விமானப்படையில் உத்தம்பூர் பகுதியில் ஏர்மேனாக பணிபுரிந்து ஒய்வு பெற்ற அதிகாரி ஆவார். சூலூர் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இவருக்கு முதல் மனைவி குழந்தைகள் இல்லை அதனால் அவரை விவாகரத்து செய்துவிட்டார். அப்போது ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சென்னையில் பணி அதற்கு அடுத்து சில ஆண்டுகள் கழித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.  திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.இவரது மனைவி அரசு பள்ளி தலைமையாசிரியராக உள்ளார்.கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இவர் அதே பகுதியில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு வசூல்செய்து வருகிறார். முறையான அனுமதி பெறாமல் பெண்கள் தங்கும் விடுதியும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. .தற்போது 10 வயதான வளர்ப்பு  குழந்தை தனக்கு தனது தந்தை பாலியல்சீண்டல் செய்வதாக பள்ளி ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார்.அவர்கள் கோவை சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்து உள்ளனர்.அதன்பேரில் சூலூர் வந்த சைல்டு லைன் அமைப்பினர் சனிக்கிழமை அந்த பெண் குழந்தையிடம் விசாரணை நடத்தினர்.இதில் குழந்தை கூறிய குற்றச்சாட்டு உண்மை என தெரிந வந்ததைத் தொடர்ந்து  ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்  அழைத்துச் சென்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மேல் வ விசாரணை நடத்தி வருகின்னர்.மேலும் இந்த பெண் குழந்தைக்கு தாய் தந்தை யார் என்பதும்,குழந்தையை தத்தெடுத்தாரா என்பதிலும்  தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.குழந்தையை விலைக்கு வாங்கி வந்த்தாகவும்  விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.மேலும்குழந்தை விற்பனை செய்தவர் 3 கைமாரி குழந்தையை இவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் குழந்தை விற்ற கும்பல் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.தத்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இவர் நடத்தி வந்த பெண்கள் விடுதியில் இரவு 12 மணிக்குமேல் பெண்கள் அறைக்குள் திடீரென இவர் திருட்டுத்தனமாக நுழைந்துள்ளார். அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த மாணவி இவரைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு முதல் மாடியிலிருந்து கீழே குதித்துத் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்த கல்லூரி மாணவர்கள் விடுதி முன்பாகக் கூடி இவரை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இவரது தந்தை பிரபல கல்லூரியின் நேர்முக உதவியாளராக இருந்த தால் மாணவர்களை சமாதானப்படுத்தி அப்போது அனுப்பி வைத்தார். இதுபற்றி சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  அப்பொழுது சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகார் அளிக்க மறுத்துவிட்டனர் தங்களது மகள்  பெயர் கெட்டு விடுமே என கூறி புகார் அளிக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து சூலூர் போலீசார் அப்போது அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தற்போது வளர்ப்பு மகளை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியது தெரியவந்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via