தென்மாவட்ட ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்திய கனிமொழி

by Editor / 20-12-2022 11:25:55pm
 தென்மாவட்ட ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்திய கனிமொழி

டெல்லியில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை சந்தித்து தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள பல்வேறு ரயில்வே திட்டப்பணிகளை விரைந்து முடித்துத் தரும்படி கேட்டுக்கொண்டஅவர் மும்பையிலிருந்து மதுரை வரையிலான ‘லோக்மான்ய திலக் விரைவு வண்டி’ தூத்துக்குடி வரை நீட்டிப்பது, மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையிலான புதிய சேவை, முன்பு அறிவித்திருந்த தாம்பரம் - செங்கோட்டை இடையிலான வாரம் மூன்று ரயில்கள், ராமேஸ்வரம் - மங்களூர் இடையில் புதிய சேவை, கோவிட் ஊரடங்கின் போது நிறுத்தப்பட்ட பாலக்காடு - பொள்ளாச்சி பயணிகள் வண்டி சேவையை மீண்டும் தொடங்குவது, காயல்பட்டினம் ரயில்நிலைய நடைமேடையை மேம்படுத்துவது போன்ற கோரிக்கைகளை விரைவில் முடித்து தர வேண்டும் என்று கேட்டுகொண்டதாக தூத்துக்குடி மக்களவை தொகுதியின் உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via