கார் கவிழ்ந்து காவல் உதவி ஆய்வாளர் மகன் பலி.

by Editor / 30-04-2022 09:15:13pm
கார் கவிழ்ந்து காவல் உதவி ஆய்வாளர் மகன் பலி.

சென்னை ஆயிரம் விளக்கு காவல்  நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அந்தோணிதாசன்.
 இவரது மகன்  அருண் மற்றும் அவரது நண்பர்கள் காரில் ஊட்டி செல்ல இன்று காரில் வந்தனர்.கார் சேலம் அருகே உடையாபட்டி பைபாஸ் பகுதியில்  வந்த போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.இதில்  காவல் உதவி ஆய்வாளரின் மகன் அருண் சம்பவ இடத்திலேயே பலியானார்.காரில் வந்த நண்பர்கள் 3 பேர் படுகாயம்அடைந்தனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
 

 

Tags :

Share via