10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் - 1.50 கோடி பணியாளர்கள்

by Staff / 16-03-2024 03:51:53pm
10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் - 1.50 கோடி பணியாளர்கள்

மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 1.50 கோடி தேர்தல் பணியாளர்கள் இந்தியா முழுவதும் பணியாற்ற உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்காக 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via