டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்த போவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் அறிவிப்பு

by Editor / 12-08-2022 03:55:05pm
டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்த போவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் அறிவிப்பு

ஆயிரக்கணக்கான வழக்குகள் காரணமாக டால்கம் பவுடர் விற்பனையை உலக அளவில் நிறுத்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டால்கம் பவுடரில் உள்ள கனிமங்கள் புற்றுநோய் உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் மட்டும் 40 ஆயிரத்து 390 வழக்கு தொடுக்க பட்டதால்  அமெரிக்காவிலும் கனடாவிலும் டால்கம் பவுடர் விற்பனையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டது. 2023 ஆம் ஆண்டில் உலக அளவில் டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. பவுடரில் கனிம பொருட்களுக்கு பதிலாக சோளமாவை பயன்படுத்தவும் முடிவெடுத்துள்ளது  வழக்குத்தொடுத்தவருக்கு இழப்பீடு வழங்குவதற்காக 200 கோடி டாலரையும் ஒதுக்கியுள்ளது.

 

Tags :

Share via