சோமாலியா நாட்டில் 40 ஆண்டுகளாக நிலவும் கடும் வறட்சி 1 மில்லியன் சோமாலியர்கள் இடம்பெயர்ந்த ஐநா சபை அறிவிப்பு

by Editor / 12-08-2022 03:48:02pm
சோமாலியா  நாட்டில் 40 ஆண்டுகளாக நிலவும் கடும் வறட்சி 1 மில்லியன் சோமாலியர்கள் இடம்பெயர்ந்த ஐநா சபை அறிவிப்பு

சோமாலியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் கடும் வறட்சி கடந்த ஆண்டு மோசமானதை அடுத்து சுமார் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து உள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. ஒரு கோடியே 59 லட்சம் மக்கள் தொகை கொண்ட சோமாலியாவில் நடப்பாண்டில் மட்டும் சுமார் 7 லட்சத்து 55 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் உக்ரைன் ரஷ்ய போரால் ஏற்பட்ட உணவுப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் சோமாலியா நாட்டில் பட்டினி எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை வரும் மாதங்களில் 5 மில்லியன் இருந்து 7 மில்லியனாக அதிகரிக்கும் என்று ஐநா அகதிகள் முகாமை கூறியுள்ளது.

 

Tags :

Share via