கோடிமுனையில் மீனவர் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மரிய கிமல் பென்டோ(42). கடலில் மீன் பிடித்தொழில் செய்து வந்தார். இவரது கனிதா(35). இவர் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இத்தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கணவன் - மனைவியிடையே கருத்து வேறுப்பாடு ஏற்பட்டு கனிதா நாகர்கோவிலில் தாய் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மரிய கிமல் பென்டோவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலையில் மரிய கிமல் பென்டோ சோர்வாக காணப்பட்டார். அவரது தாய் ஏன்? சோர்வாக இருக்கிறாய் என கேட்டதற்கு, ஒன்றுமில்லை என மரிய கிமல் பென்டோ பதில் கூறினார். பின்னர் அவர் அவரது அறைக்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து தாய் அறையில் சென்று பார்க்கும்போது மரிய கிமல் பென்டோ மின் விசிறியில் நைலான் கயிற்றில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இந்த தகவல் நாகர்கோவிலில் வசித்து வரும் மனைவி கனிதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கனிதா கோடிமுனை விரைந்து வந்து, குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :