தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல்
சென்னை பூந்தமல்லி கோளப்பன்சேரி சோதனைச் சாவடியில் நேற்றிரவு (மார்ச்.30) தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.2.29 கோடி இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும், உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :