தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் கே.என்.நேரு

by Staff / 31-03-2024 02:24:50pm
தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் கே.என்.நேரு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திமுக அமைச்சர் கே.என்.நேரு இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக பீமா நகர் பகுதியில் உள்ள செடல் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது முதல் பிரச்சாரத்தை இன்று துவக்கினார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சியின் நிர்வாகிகள், ஆதரவு அமைப்பு நிர்வாகிகள், மதிமுகவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மார்சிங்பேட்டை, ஒத்தக்கடை, பெரிய மிளகுபாறை, காமராஜபுரம் பொன்னகர், கருமண்டபம் பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு பொதுமக்களிடையே அமைச்சர் உரையாற்றினார்.

 

Tags :

Share via