மதுரை மாநகராட்சியில் 6 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

by Editor / 31-05-2022 09:58:56am
மதுரை மாநகராட்சியில் 6 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், கொரோனா  ஊக்கத் தொகை, ஒப்பந்த முறை ரத்து உள்ளிட்ட 28 கோரிக்கைகளை முன் வைத்து மதுரை  மாநகராட்சியில் 2 ஆம் நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது.தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் குப்பைகள் தேக்கம் அதிகரித்து ஆங்கங்கே துர்நாற்றம் விசிவருகின்றன.தூய்மைபணியாளர்களின் போராட்டம் காரணமாக  மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் குப்பைகள் அகற்றும் பணி தொய்வு அடைந்துள்ளது.மதுரை மாநகராட்சியில்  3 தொழிலாளர்கள் சங்கங்களை சேர்ந்த 6 ஆயிரம் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்,இதுவரை நடைபெற்ற 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை.
 

 

Tags : 6 thousand cleaning workers protest in Madurai Corporation

Share via