ஸ்மார்ட்ஃபோன் வாங்கிய நபர் செய்த செயலை பாருங்களேன்....

by Admin / 22-12-2021 02:23:05pm
ஸ்மார்ட்ஃபோன் வாங்கிய நபர் செய்த செயலை பாருங்களேன்....

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த தேநீர் வியாபாரி, ரூ.12,500 கொடுத்து ஒரு ஸ்மார்ட்ஃபோனை வாங்கியுள்ளார். நாட்டில் பல கோடி பேர் ஸ்மார்ட்ஃபோன் வைத்திருந்தாலும், இவர் வாங்கிய முதல் ஸ்மார்ட்ஃபோன் இதுதான்.

எனவே, அதைக் கொண்டாட ஸ்மார்ட்ஃபோன் வாங்கி, அதை, தனது மகளின் கையில் கொடுத்து, ஒரு குதிரை வண்டியில் மகளை அமரவைத்து, அலங்கரித்து, வீட்டுக்கு கொண்டு நடனமாடி, பேண்ட் வாத்தியங்கள் இசைக்க, தேநீர் வியாபாரி கொண்டு வந்த விடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
 
இதை பற்றி தேநீர் வியாபாரி முராரி குஷ்வாஹா கூறுகையில், எனது மகள் அடிக்கடி ஸ்மார்ட்ஃபோன் கேட்டுக் கொண்டிருந்தாள். அவரிடம் சொல்லும்போதெல்லாம் விரைவில் வாங்கித் தருகிறேன், நாம் ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் போது அதை இந்த ஊரேவேடிக்கை  பார்க்கும் என்றும்  கூறுவேன்.

உண்மையிலேயே நான் ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் போது அதை செயல்படுத்த திட்டமிட்டு, இவ்வாறு குதிரை வண்டி, மேளம்  வாத்தியம் இசைக்கக் கொண்டு வந்து, ஊரையே பார்க்க வைத்துவிட்டேன் சிரித்தபடி கூறியுள்ளார்.

 

Tags :

Share via