காந்தி பிறந்தநாளில் கரூரில் கள்ளச்சந்தையில் கல்லாகட்டிய மதுவிற்பனை.

by Editor / 02-10-2022 10:09:13pm
காந்தி பிறந்தநாளில் கரூரில் கள்ளச்சந்தையில் கல்லாகட்டிய மதுவிற்பனை.

தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் காந்தி ஜெயந்தியான இன்று கட்டாயம் விடுமுறை அளிக்கப்பட்டதோடு, மீறி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆங்காங்கே அதிரடி ரோந்தும், சோதனைகளும் நடத்தப்பட்ட நிலையில், ஒரு பெண்மணி உள்பட 72 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, அவர்களிடமிருந்து 500 க்கும் மேற்பட்ட கள்ள மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் கரூர் மாநகரில் அதுவும் பேருந்து நிலையத்தில் மதுபான கூடங்கள் 3 இயங்கியுள்ளது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.காந்திஜெயந்தி அன்று மதுபான பார்களே நடத்திய கில்லாடி போலீஸார்கள் மீதும் நடவடிக்கை எடுப்பாரா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர் நடுநிலையாளர்களும் சமூக நல ஆர்வலர்களும்

காந்தி பிறந்தநாளில் கரூரில் கள்ளச்சந்தையில் கல்லாகட்டிய மதுவிற்பனை.
 

Tags :

Share via