தூத்துக்குடி - சென்னை இடையே வாரத்தில் 3 நாட்களுக்கு புதிய விமானம்.

by Editor / 30-03-2022 10:46:20pm
தூத்துக்குடி - சென்னை இடையே வாரத்தில் 3 நாட்களுக்கு புதிய விமானம்.

தூத்துக்குடி விமான நிலையத்தில்  சமீபகாலமாக அதிக அளவில் பயணிகள் விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடி-சென்னை இடையே தினமும் 3 நேரங்களில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. மேலும்  தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக  தற்போது கோடை காலம் நெருங்கி வருவதால் பொது மக்கள் வசதிக்காக தூத்துக்குடி, சென்னை இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் சிறப்பு விமானம் இயக்கம் தொடங்கப்படவுள்ளது.என்றும் இந்த விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைகிறது. தூத்துக்குடியில் இருந்து மதியம் 1.35 மணிக்கு மீண்டும் புறப்பட்டு சென்னையை சென்றடைகிறது.

தூத்துக்குடி - சென்னை இடையே வாரத்தில் 3 நாட்களுக்கு புதிய விமானம்.
 

Tags : New flight between Thoothukudi - Chennai 3 days a week.

Share via