நெல்லை பாலிமர் செய்திகள் நிருபர் முத்துக்குமார் பலி-துரை.வைகோ  இரங்கல்.

by Editor / 22-11-2023 10:11:57am
நெல்லை பாலிமர் செய்திகள் நிருபர் முத்துக்குமார் பலி-துரை.வைகோ  இரங்கல்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர் சகோதரர் முத்துக்குமாரசாமி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். 

எதிர்பாராத மரணங்கள் எப்போதும் வேதனை அளிக்கின்ற ஒன்றாகவே இருக்கின்றது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருத்தமுடன்,
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
22.11.2023

 

Tags : நெல்லை பாலிமர் செய்திகள் நிருபர் முத்துக்குமார் பலி-துரை.வைகோ  இரங்கல்.

Share via