5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

by Staff / 28-10-2023 04:23:57pm
5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகர வடக்கு துணை ஆணையராக இருந்த கவுதம் கோயல், தாம்பரம் காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிருந்தா ஐபிஎஸ் சேலம் மாநகர வடக்கு துணை ஆணையராகவும், அய்மான் ஜமால் ஐபிஎஸ், ஆவடி மாநகர காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணைராகவும், பாஸ்கரன் ஐபிஎஸ், மதுரை, தமிழக சிறப்பு போலீஸ் 6வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆகவும், சென்னை, ரயில்வே எஸ்.பி., ஆக சுகுணா சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via