காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை - எல்.முருகன்

by Staff / 28-10-2023 04:45:53pm
காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை - எல்.முருகன்

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக தமிழக காவல்துறையின் விசாரணையில் நம்பிக்கை இல்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கூறினார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ரௌடி கருக்கா வினோத் என்பரை போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via