ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தி சென்ற மர்ம கும்பல் போலீசார் விசாரணை

by Editor / 31-05-2022 03:19:17pm
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தி சென்ற மர்ம கும்பல் போலீசார் விசாரணை

சென்னை அடுத்த மாங்காட்டில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை அடுத்த மாங்காட்டை சேர்ந்தவர் சுரேஷ் குமார் என்பவர் வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் கத்திமுனையில் அவரை காரில் கடத்தி சென்றுள்ளனர். சுரேஷ்குமார் தனது வீட்டை 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்த நிலையில் முன்பணம் கொடுக்க சிலர் அவரது வீட்டிற்கு வந்துள்ளர். அப்போது 10க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட கும்பல் தீடீரென அவரது வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி சுரேஷ்குமாரை காரில் கடத்தி சென்றதாகவும் சுரேஷ்குமார் தங்களுக்கு ஒரு கோடி தர வேண்டும் என கூறியதாகவும் கூறப்படுகிறது.அவரது குடும்பத்தினர் கொடுத்த தகவலைத்தொடர்ந்து  போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Mysterious gang kidnapping real estate tycoon is being investigated by police

Share via