உக்ரைனில் பள்ளி மீது ஏவுகணை தாக்குதல் ஒருவர் பலி

by Staff / 03-06-2022 11:58:48am
 உக்ரைனில் பள்ளி  மீது ஏவுகணை தாக்குதல் ஒருவர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 100 நாட்களை கடந்து உள்ள நிலையில் நகரில் உள்ள பள்ளிக் கட்டடத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். உக்ரேன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள ரஷ்ய படைகள் பொதுமக்களின் உயிருக்கு உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கார்கிவ்  பகுதியில் உள்ள பள்ளி மீது நடத்திய தாக்குதலில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து நொறுங்கி தரைமட்டமானது.

 

Tags :

Share via