பறவைக் காய்ச்சல் எதிரொலி; நாமக்கல்லில் 2 கோடி முட்டைகள் தேக்கம்

by Editor / 30-10-2022 12:27:17am
பறவைக் காய்ச்சல் எதிரொலி; நாமக்கல்லில் 2 கோடி முட்டைகள் தேக்கம்

கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. அச்சம் காரணமாக வெளிநாடுகள் முட்டை இறக்குமதியை குறைத்ததே இதற்கு முக்கிய காரணம். மேலும், அதிகளவில் முட்டை கொள்முதல் செய்யும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், முட்டை உற்பத்தியாளர்களிடம் கால்நடை துறை சான்றை சமர்பிக்க கோருகின்றன. இதனால், நாமக்கல்லில் 2 நாட்களில் 2 கோடி முட்டைகள் தேங்கின.

 

Tags :

Share via