ஊமைப்படமாக ஓடிய கமலின் விக்ரம்..ஆவேசமடைந்த ரசிகர்கள் சமாதானம் செய்த காவல்துறை
நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 3 திரையரங்குகளில் வெளியாகி உள்ளன. கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் எதிரே உள்ள லட்சுமி திரையரங்கில் விக்ரம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது, சனிக்கிழமை காலை 11 மணி காட்சி ஓடிக் கொண்டிருக்கும் போது இடைவேளைக்குப் பின்னர் திரையில் சப்தமில்லாமல் ஊமைப்படம் ஓடியுள்ளது இதனால் அதிர்ச்சியடைந்தாராசிகர்கள் கூச்சலிட்டனர். திரையரங்கில் ஆடியோ பிரச்சினை இருப்பதாகவும் அதனை சரிசெய்து கொண்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் சரியாகி விடும் என்றும் திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனாலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் சத்தமில்லாமல் ஊமைப் படம் ஓடிக்கொண்டிருக்க ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து தாங்கள் கொடுத்த டிக்கெட் பணத்தை முழுமையாக திருப்பிக் கொடுக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், திரையரங்க நிர்வாகம் முழுமையான பணம் தரமுடியாது, பாதி பணம் தான் தரமுடியும் இல்லையென்றால் ஆடியோ சரியாகும் வரை காத்திருந்து படத்தினை பார்த்து செல்லுங்கள் என கறாராக கூறவே இதன் காரணமாக நிர்வாகத்திற்கும்,ரசிகர்களுக்கும் வாக்குவாதம் முற்றியது, இது குறித்து காவல் துறைக்கு கிடைத்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர், மேலும் படத்தை முழுமையாக பார்க்காவில்லை அதனால் முழு கட்டணத்தையும் திரும்பத் தரவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து போலீசார் சமாதானம் செய்து முழு கட்டணத்தையும் ரசிகர்களுக்கு நிர்வாகத்தை வழங்க பேச்சுவார்த்தையில் தீர்வு ஏறபடவே ரசிகர்கள் முழுப்பணத்தை பெற்று சென்றனர்.இதன் காரணமாக அங்கு நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
Tags : Kamal Vikram who ran silently..Police who appeased the angry fans