தாய்லாந்தில் போதை வஸ்துக்கள் பட்டியலிலிருந்து கஞ்சா நீக்கம் கைதுசெய்யப்பட்ட 3000 பேர் விடுவிப்பு

by Staff / 10-06-2022 02:38:13pm
தாய்லாந்தில் போதை வஸ்துக்கள் பட்டியலிலிருந்து கஞ்சா நீக்கம் கைதுசெய்யப்பட்ட 3000 பேர் விடுவிப்பு

தாய்லாந்தில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களின் பட்டியலில் இருந்த கஞ்சா நீக்கப்பட்டதை  தொடர்ந்து. கஞ்சா சார்ந்த குற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர். சிறை வாசல்களில் காத்திருந்த உறவினர்கள் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஆசிய நாடுகளில் முதல் முறையாக தாய்லாந்தில் போதை வஸ்துகள் பட்டியலிலிருந்து கஞ்சா நீக்கப்பட்டுள்ளது  சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக கஞ்சா செடிகளை பயிரிட உணவில் சேர்த்துக் கொள்ளவும் அரசு அனுமதி அளித்துள்ளது அதேசமயம் கஞ்சா புகைப்பது இன்னும் குற்றச் செயலாக கருதப்படுகிறது.

 

Tags :

Share via