ஜம்மு காஷ்மீரில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் புதன்கிழமை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மதியம் 12.22 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் மையம் தோடாவில் பூமிக்கு 5 கிமீ ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :