80 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 11 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரம்

by Staff / 11-06-2022 11:59:49am
80 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 11 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரம்

சத்திஸ்கர் மாநில ஜாங்கிரி சம்பா மாவட்டத்தில் 80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 11 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.பிஹரிட்  கிராமத்தைச் சேர்ந்த 11 வயது ராகுல் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த உள்ளான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்ட அதிகாரிகள் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via