குழந்தைகள் கண் எதிரே தாயை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்

by Admin / 17-03-2022 05:15:58pm
குழந்தைகள் கண் எதிரே தாயை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்

ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் மாவட்டத்தில் தலித் பெண்ணை 6 பேர் கொண்ட  கும்பல் துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

அந்தப் பெண் சம்பவத்தன்று, கணவன் மற்றும் குழந்தைகளுடன் தனது தோட்டத்தில் இருந்து வீடு திரும்பியபோது, அந்த கும்பல் தடுத்து நிறுத்தி தாக்கி உள்ளது. பின்னர் நாட்டுத் துப்பாக்கியால் கணவனை அடித்து விரட்டி உள்ளனர். பின்னர், குழந்தைகள் முன்னிலையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி, அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இதுபற்றி போலீசில் அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கஞ்சன்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகள் 6 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த பெண்ணின் ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Tags :

Share via