முக கவசம் கட்டாயம்.. அதிரடி உத்தரவு
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா பல உயிர்களை பறித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, உயிரிழந்த பெண்ணிற்கு இணை நோய்கள் இருந்ததால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொது இடங்களில் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காரைக்காலில் ஒன்றை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :