உதகையில் லாரி ஓட்டுநர்கள் 24 மணி நேரம் வேலைநிறுத்தம் போராட்டம்
உதகையில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம், காய்கறி உற்பத்தி, வியாபாரிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தால் 500க்கும் மேற்பட்ட லாரிகள் இன்று இயங்காததால் காய்கறி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
Tags :