தமிழகத்திலிருந்து இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

by Editor / 22-06-2022 05:14:54pm
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக 15 ஆயிரம் டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு கடந்த மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் 33 கோடி ரூபாய் மதிப்பில் 50 ஆயிரத்து 500 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன .தற்போது இரண்டாவது கட்டமாக 14700 டன் அரிசி 250 டன் ஆவின் பால் பவுடர் 50 டன் மருந்து பொருட்கள் என 67 முக்கால்  மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 15,000 தன் நிவாரண பொருட்களுடன் புறப்பட்ட சரக்கு கப்பல் அமைச்சர்கள் சக்கரபாணி செஞ்சி மாஸ் தான் கீதாஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via