அமைச்சரை சந்தித்து வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி அதிகாரி
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடல் என்பதை நாங்கள் உணர்கிறோம் என தமிழக நிதி அமைச்சரை சந்தித்து ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலக பிரதிநிதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நின்று மரியாதை செய்யாதது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்.சுவாமி தலைமையில், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் முருகானந்தம் ஆகியோரை நேற்று காலையில் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர்.
Tags : The Reserve Bank official who met the Minister and expressed regret