திருச்செந்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை 2பேர் கைது

by Staff / 17-04-2023 04:49:45pm
திருச்செந்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை 2பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது - 3 கிலோ கஞ்சா பறிமுதல்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முரளிதரன் தலைமையில் முதல் நிலை காவலர்கள் திரு. சுந்தர்ராஜ் மற்றும் திரு. முருகேஷ்பாபு ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸார் நேற்று (16. 04. 2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் தேனி மாவட்டம் சோலைதேவன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் அபிஷ் (எ) மருது (22) தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த லிங்கம் மகன் தங்கமாரியப்பன் (22) என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகளான அபிஷ் (எ) மருது மற்றும் தங்கமாரியப்பன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via