ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை பதுக்கி வைத்திருந்த தந்தை மகன் கைது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மகன் சூர்யா இவர்கள் நன்னிலத்தில் உணவகம் நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் இவர்களது வீட்டில் தொன்மை வாய்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை உட்பட சாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் குற்றப் புலனாய்வு காவல்துறையினர் பத்துக்கும் மேற்பட்டோர் இவர்களது வீட்டில் சோதனை செய்த பொழுது ஆயிரம் ஆண்டுகள் பழமையான தன்வந்திரி ஐம்பொன் சிலை 1 1/4 அடி உயரமுள்ள ராக்காயி அம்மன் வெண்கல சிலை மற்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முக்கால் கிலோ எடை உள்ள இரண்டு செப்பு நாணயங்கள் ஒரு காலச் சக்கரம் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்து தந்தை மகன் இருவரையும் கைது செய்துள்ளனர்.
Tags :