சாலை விபத்தில் தந்தை-மகள் பலி போலீசார் விசாரணை

by Staff / 25-08-2023 03:31:55pm
சாலை விபத்தில்  தந்தை-மகள் பலி போலீசார் விசாரணை

கடலூர் அருகே வாகனம் மோதி தந்தை, மகள் பலியானார்கள். கடலூர் முதுநகர் அடுத்த தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 41). கூலி வேலை செய்து வந்தார். இவரது மகள் மதுவினா (6). அதே பகுதியில் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று நள்ளிரவு தனசேகர் அவரது மகள் மதுவினாவை கடலூர் - விருத்தாச்சலம் சாலை எஸ். என். நகரில் அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடந்து செல்லும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் தனசேகர், அவரது மகள் மதுவினா மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இவர்களது சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அங்கு வந்து பலத்த காயமடைந்த 2 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தனசேகர், அவரது மகள் மதுவினா பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாகனத்தை யார் ஓட்டியது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை- மகள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via