ஒரு ரூபாய் கூட எனது வீட்டில் கைப்பற்றவில்லை-விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கைச் சட்டப்படி சந்திப்பேன் எனத் தெரிவித்தார். மேலும், தனது இல்லத்தில் எந்த ஆவணங்களோ, பணமோ தங்கமோ பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் கடினமான ஒரு உழைப்பாளி. பொது வாழ்கையில் கூட இரவு, பகல் பார்க்காமல் நான் கடினமான உழைப்பை வெளிப்படுத்தி வருகிறேன்.
இது அனைவருக்கும் தெரியும். சட்டத்தை ஏற்று மதிக்கும் குடிமகன் என்பதால் இன்றைய தினம் நடத்தப்பட்ட சோதனைக்கு நான் முழு ஒத்துழைப்பை அளித்துள்ளேன். எனது வீட்டில் இருந்து எந்தவிதமான ஆவணங்களோ, பணமோ தங்கமோ லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைப்பற்றப்படவில்லை.
Tags :