எதிர்கட்சிகளை குறிவைத்து சோதனை - கே.எஸ்.அழகிரி
திமுக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமே வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர் என விமர்சித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நீட் தேர்வுக்கு எதிரான இயக்கத்தில் கையெழுத்திட்ட பின் பேசிய அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தால் வரவேற்றிருக்கலாம். பிரதமர் மோடி முசோலினி போல சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார்.
Tags :